ஊழியர்களுக்கான அடிப்படை தகுதிகள் (1)
Last Updated on Thursday, 08 October 2009 08:47
மேய்ப்பர், போதகர், மற்றும் மூப்பர்களுக்கான அடிப்படை தகுதிகள்
ஜனங்கள் மீது அன்பு செலுத்துபவனாக காணப்பட வேண்டும்
| இப்படி இருக்க வேண்டும் |
இப்படி இருக்ககூடாது |
| நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10 : 11 |
கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். யோவான் 10 : 13 |
ஜனங்கள் உங்களை போதகரே என்று அழைப்பதை நீங்கள் விரும்பவும், எதிர்பார்க்கவும் கூடாது.
|
(Rev, Bishop, Dr, Appostel..... ect.) யாராவது கேட்டால் நீங்கள் போதக ஊழியம் செய்கின்றீர்கள் என்று சொல்லலாம், ஆனால் மற்றவர்கள் உங்களை போதகரே என்று அழைப்பதை நீங்கள் விருபம்புவீர்களாக இருந்தால்தான் அது தவறு! |
|
சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்: |
உங்களையல்ல இயேசுவை உயர்த்துங்கள்!
|
இன்றைக்கு பலர் இயேசுவைவிட தங்களையே மகிமைப்படுத்துகின்றனர். ஊழிங்களுக்கு தங்களுடைய பெயரை அல்லது தங்களது பிள்ளைகளின் பெயரை வைக்கின்றனர். (தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கின்றார்). |
|
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். |
மற்றவர்கள் உங்களை காண வேண்டும், பாராட்ட வேண்டும், உங்களைப்பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று காரியங்கள் செய்யக்கூடாது!
|
மிக மிக முக்கியம். உன்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படியொரு ஊhழியத்தையே செய்துவந்தால், அந்த ஊழியத்துக்கு பயன் இல்லை! |
|
1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, |
நீ எதை போதிக்கின்றாயோ, அதை நீயே செய்ய வேண்டும்.
|
இன்றைய சபைகளில் இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. போதிப்பவனுக்கும் வேதாகமத்துக்கும் சம்பந்தமே இருக்காது ! |
|
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; |
தாழ்மை இல்லையேல் ஊழியம் இல்லை!
|
ஊழியம் என்பது .. இதுதான் அதன் முதற்படி. |
|
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். |
உன்னை நீயே சோதி: உண்மையுள்ளவனா ? முகதாட்சண்யம் பார்க்காதவனா?
|
பொய்யர் அனைவரும் நரகத்திலே தள்ளப்படுவர். |
|
அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லை (அக்கறையில்லை) என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். மாற்கு 12 : 14 |
| < Prev | Next > |
|---|







